அழகர்கோவிலுக்கு துணை கமிஷனர் நியமனம்

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு 7 மாதங்களுக்கு பிறகு துணைகமிஷனராக யக்ஞநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்கோயிலின் துணை கமிஷனராக இருந்த கலைவாணன் கடந்தாண்டு ஜூலை 31ல் ஓய்வு பெற்றார். அதன் பின் 7 மாதங்களாக அப்பதவி காலியாக இருந்தது. மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
மேலும் சித்திரைத்திருவிழா ஏப்.29ல் தொடங்குகிறது. இதன்காரணமாகவும், திருப்பணிகளை கவனிக்கவும் குற்றாலநாதர் கோயிலில் பணியாற்றிய யக்ஞநாராயணனுக்கு பதவி உயர்வு அளித்து இங்கு இடமாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயிலில் பணியாற்றியவர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி
-
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் தர்ணா
-
தேவகோட்டை வீடுகளில் கொள்ளை தாய், மகன், மகள் உட்பட 4 பேர் கைது
-
'தர்க்கம் செய்யாதீர்': விவசாயிகளை கடிந்த கலெக்டர்; மனுவுக்கு 236 நாளாக தீர்வில்லை: விவசாயிகள் அதிருப்தி
-
இருமதி மஞ்சு விரட்டு: 22 பேர் காயம்
-
சிங்கம்புணரிக்கு புறவழிச்சாலை; நெரிசல் குறையுமா என மக்கள் எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement