கைத்தறி நெசவாளர்களுக்கு தறி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு
ஆண்டிபட்டி : சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் செயல்படும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு தறி உபகரணங்கள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இப்பகுதியில் செயல்படும் 7 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்களில் தற்போது இரு நூறு நெசவாளர்கள் மட்டும் அரசின் இலவச சேலை உற்பத்தி செய்கின்றனர்.
இலவச சேலை உற்பத்தியில் இந்த ஆண்டுக்கான உற்பத்தி திட்டம் இன்னும் அரசு வழங்கவில்லை.
இந்நிலையில் தற்போது செயல்பாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.4000 மதிப்பிலான அச்சு, விழுது உள்ளிட்ட தறி உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இன்னும் சில நாட்களில் இதற்கான பணிகள் துவங்கும் என்று கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போப் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
-
சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்
-
'இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான் விக்சித் பாரத் 2047 இலக்குக்கு முக்கிய காரணி'
Advertisement
Advertisement