இரு இடங்களில் பஸ்கள் கவிழ்ந்து 10 பேர் காயம்

நரிக்குடி : மதுரையில் இருந்து நரிக்குடி வீரசோழனுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை மானாசாலை அருகே சம்பக்குளம் பிரிவு ரோட்டில் டூ வீலர் குறுக்கே வந்ததால் விலகிச் செல்ல முயன்ற போது நிலை தடுமாறி வயலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் பயணம் செய்த 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரசோழன் போலீசார் விசாரிக்கின்றனர்.
நேற்று காலை பந்தல்குடி கலை ,அறிவியல் தனியார் கல்லூரிக்கு சொந்தமான பஸ் மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றபோது மல்லாங்கிணர் முடியனூர் விலக்கு அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்டபோது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 7 மாணவர்கள் காயமடைந்தனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
போப் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
-
சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்
-
'இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான் விக்சித் பாரத் 2047 இலக்குக்கு முக்கிய காரணி'