கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10ஆண்டு சிறை

தேனி : தேனி அருகே இளைஞரை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட அல்லிநகரம் கம்பம் தெரு வாலிபர் தீபக்கிற்கு 21, பத்தாண்டுகள் சிறை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி அல்லிநகரம் இளங்கோ தெரு லதா 42. இவரது மகன்கள் ரஞ்சித்குமார், தினேஷ்குமார். 2024 மே 29ல் இரவில் வீட்டிற்கு அருகில் சமுதாய கூட்டம் நடக்க இருந்தது. அதற்கு தாய் லதா, மகன்கள் இணைந்துசென்றனர்.
அதேப்பகுதியை சேர்ந்த அர்ஜூனனின் மகன்கள் தீபக், வினோத்குமார், உறவினர்கள் தெய்வேந்திரன், பரமசிவம் ஆகிய நால்வர் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது தீபக், வினோத்குமார் ஆகிய இருவர் தினேஷ்குமாரிடம், எதற்கு எங்களை பார்த்து சிரிக்கிறாய்,'என கேட்டனர்.இதில் தகராறு ஏற்பட்டு வினோத்குமார், தெய்வேந்திரன், பரமசிவம் இணைந்து ரஞ்சித்குமார், தினேஷ்குமாரை தாக்கினர்.
தினேஷ்குமாரை, தீபக் கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டார். தினேஷ்குமார் தேனிமருத்துவக்கல்லுாரி சிகிச்சை பெற்று திரும்பினார்.
அல்லிநகரம் போலீசார் தீபக், வினோத்குமார், தெய்வேந்திரன், பரமசிவம் ஆகிய நால்வரையும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அரசு வழக்கறிஞர் சுகுமாறன் ஆஜரானார். குற்றவாளி தீபக்கிற்கு பத்தாண்டுகள் சிறை, ரூ. ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் வினோத்குமார், தெய்வேந்திரன், பரமசிவம் உட்பட மூவர் விடுவிக்கப்பட்டனர்.
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை