காரியாபட்டி நகை திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

காரியாபட்டி : காரியாபட்டியில் எலெக்ட்ரிசியன் சுப்புராஜ் வீட்டில் பிப்.4ல் வீட்டுக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 30 பவுன் நகையை திருடி சென்ற, சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கணேசன், முன்னாள் போலீஸ்காரர் கண்ணன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கணேசனிடம் இருந்த 16 பவுன் நகை கைப்பற்றப்பட்டது.

நேற்று முன் தினம் முன்னாள் போலீஸ்காரர் கண்ணன் குமார் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த 6 பவுன் நகை கைப்பற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து நகையை விற்பனை செய்ய உதவிய வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த சதாம் என்பவரை காரியாபட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement