கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது
தேவகோட்டை : தேவகோட்டை தாலுகாவில் சிவராத்திரியை முன்னிட்டு பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் பாவனக்கோட்டை பரம்பக்குடி அருகே நேற்று முன்தினம் இரவு பெண் எஸ். ஐ., செல்வி , போலீஸ் சதீஷ் குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தேவகோட்டை சருகணி நெடுஞ்சாலையில் வந்த ஒரு டூவீலரை நிறுத்தி சோதனையிட்டபோது அந்த வாகனத்தில் 2 அடி நீளமுள்ள பட்டாக்கத்தி வாள் இருந்தது.
விசாரணையில் தேவகோட்டை அருகே இறகுசேரி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் முத்துக்குமார் என தெரியவந்தது. இவர் இரு வருடங்களுக்கு முன் தேவகோட்டை நகரில் நடந்த இரு கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டவர் என்றும், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சரித்திர பதிவேட்டில் உள்ளவர் என தெரியவந்தது. முத்துக்குமாரை ஆயுத தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
-
தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு
-
போப் உடல்நிலையில் முன்னேற்றம்; வாடிகன் தகவல்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
Advertisement
Advertisement