பொதுமக்களுக்கு இடையூறு; இருவர் கைது

புவனகிரி; மருதுார் அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி தாலுகா, மருதுார் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நத்தமேடு பகுதியில் குடிபோதையில் பொது மக்களை ஆபாச வார்த்தைகளால், திட்டி போக்குவரத்திற்கு இடையூறாக தொந்தரவு செய்த நத்தமேடு, கிழக்கு தெருவை சேர்ந்த அவீன்காந்த்,23; அரவிந்த், 22; ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement