சேத்தியாத்தோப்பில் எஸ்.பி., திடீர் ஆய்வு

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சேத்தியாத்தோப்பு சரகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்த எஸ்.பி., ஜெயக்குமார் சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்று ஆவணங்களை ஆய்வு செய்தார்.

பின்னர் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.

சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன், எஸ்.பி., தனிப்பிரிவு சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் ஆய்வின்போது உடனிருந்தனர்.

Advertisement