காணாமல் போன காவலாளி சடலமாக மீட்பு
உத்திரமேரூர், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பருத்திக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 54; தனியார் தொழிற்சாலை காவலாளி. இவர், நேற்றுமுன்தினம், இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் ஆனந்தனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை, அதே பகுதியில் உள்ள தனியார் விவசாய கிணற்றில், ஆனந்தன் இறந்த நிலையில் கிடந்தார்.
உத்திரமேரூர் போலீசார் ஆனந்தன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பறவை மோதி தீப்பிடித்த விமானம்
-
'அரசியல் காரணங்களுக்காக கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு'
-
சசி தரூர் செயல்பாடுகள் ராகுல் கடும் எச்சரிக்கை
-
கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் சகோதரர் மகனை நீக்கினார் மாயாவதி அரசியல் வாரிசே தேவையில்லை என ஆவேசம்
-
பொலிவியாவில் பஸ் விபத்து 37 பேர் பலி
-
பேச்சில் உடன்பாடு ஏற்படாததால்3ம் நாளாக போராட்டம் நீடிப்பு
Advertisement
Advertisement