பறவை மோதி தீப்பிடித்த விமானம்

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நியூவார்க்கில் இருந்து, இண்டியானா போலிஸ் மாகாணத்திற்கு நேற்று 'பெட்எக்ஸ்' நிறுவனத்தின் சரக்கு விமானம் புறப்பட்டது.

வானில் பறக்கத் துவங்கிய சில நிமிடங்களிலேயே அதன் வலதுபுற இன்ஜினில் பெரிய பறவை மோதியது.

இதனால் அந்த இன்ஜினில் தீப்பற்றியது. விமானத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் மற்றும் மூன்று விமான ஊழியர்கள் இருந்தனர்.

தீ பற்றியதை அறிந்த விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து உடனடியாக தரையிறங்க அனுமதி கோரினார்.

அனுமதி கிடைத்ததும் விமானம் தரையிறங்கியது. தரையிறங்கும் வரை இன்ஜினில் பற்றிய தீ அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்தது. விமானம் தரையிறங்கியதும், ஓடுபாதை அருகே தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Advertisement