குழந்தைகள் மையத்தை பராமரிக்க அறிவுறுத்தல்
குழந்தைகள் மையத்தை பராமரிக்க அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி: சூளகிரி ஊராட்சி ஒன்றியம் பாத்தகோட்டா கிராமத்திலுள்ள குழந்தைகள் மையம், காமன்தொட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை, அட்டக்குறிக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். பீர்ஜேப்பள்ளி ஊராட்சி பாத்தக்கோட்டா கிராமத்திலுள்ள குழந்தைகள் மையத்தை பார்வையிட்டு, குழந்தைகளின் வருகை பதிவேடு, எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். குழந்தைகள் மையம் மற்றும் கழிப்பறை ஆகியவற்றை துாய்மையாக பராமரிக்க அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
ஓசூர், சப் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் இந்திரா, பி.டி.ஓ., ராஜேஷ், தாசில்தார் மோகன்தாஸ், ஆர்.ஐ., ரத்தினகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரம்: விழிப்புணர்வு தேவை என்கிறார் சசி தரூர்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி