போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரம்: விழிப்புணர்வு தேவை என்கிறார் சசி தரூர்

4

கொச்சி: "கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது மிகவும் தீவிரமாகி வருகிறது,'' என்று காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கூறினார்.

கொச்சியில் சசிதரூர் அளித்த பேட்டி:
கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது மிகவும் தீவிரமாகி வருகிறது. இது குறித்து நான் பார்லி.யில் எழுப்பியுள்ள பிரச்சினைக்கு அதிகாரிகளிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை.

கேரளாவில் போதைப்பொருட்களுக்கு எதிரான போர் நமக்குத் தேவை. அனைத்து மதங்களையும் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் மிகவும் தீவிரமான விழிப்புணர்வு முயற்சி நமக்குத் தேவை.

போதைப் பொருட்கள் எங்கிருந்து, எப்படி விநியோகம் செய்யப்படுகிறது என்பதை
அடையாளம் காண, மத்திய அரசுடன் மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்.


போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களின் நண்பர்கள் அவர்களின் தவறுகளை சுட்டிகாட்ட வேண்டும்.

தங்கள் நண்பர்கள் செய்யும் தவறுகளைப் பாதுகாப்பதன் மூலம் தங்கள் நண்பருக்கு விசுவாசமாக இருப்பதாக அவர்கள் நினைத்தால் அவர்கள் தவறு செய்கிறார்கள்.

போதைப் பொருள் சப்ளையர்கள் மற்றும் விற்பனையாளர்கள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள் . துரதிர்ஷ்டவசமாக, போதைப்பொருள் உள்ளிட்ட கவனச்சிதறல்களைத் நாடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

இதற்கான விழிப்புணர்வு இளைஞர்களுக்கு அவசியம்.

இவ்வாறு சசி தரூர் கூறினார்.

Advertisement