சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகம்

உத்திரமேரூர், உத்திரமேரூர் தாலுகா, புல்லம்பாக்கம் ஊராட்சியில், கிராம நிர்வாகஅலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு பட்டா, சிட்டா, அடங்கல், முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவைகள் பெற, தினமும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இக்கட்டடம், 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டதால், கட்டடம் சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்துகம்பிகள் வெளியேதெரிகின்றன.
மேலும், மழைக்காலத்தில் சுவர்களில் தண்ணீர் கசிந்து ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. இதனால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கட்டடம் எப்போது இடிந்து விழுமோ, என்ற அச்சத்தோடு வந்துசெல்கின்றனர்.
எனவே, சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிட்டி பேனர் பகுதிக்காக.... மாற்றலாமே ஒரே அலுவலகத்தில் பல ஆண்டுகளை கடந்த அலுவலர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்
-
பணம் கேட்டு தொல்லை கொடுக்குறாங்க
-
நத்தம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்
-
கோவையில் போதைப்பொருள் 'நெட்வொர்க்' சிக்கியது
-
பொதுத்தேர்வில்- 383 பேர் ஆப்சென்ட்
-
நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள்
Advertisement
Advertisement