பணம் கேட்டு தொல்லை கொடுக்குறாங்க
திண்டுக்கல்: பணம் கேட்டு தொல்லை கொடுக்குறாங்க என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மக்கள் மனுக்களாக எழுதி வந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் முறையிட்டனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 187 மனுக்கள் பெறப்பட்டது.
கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பேருக்கு ரூ.1.45 லட்சம் மதிப்பிலான திறன்பேசி, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு இலவச தேய்ப்பு பெட்டிகள், 5 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
ஆர்.டி.ஓ., சக்திவேல், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி பங்கேற்றனர்.
மேலும்
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு