குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்!

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் பூமி பூஜையுடன் பணிகளை இஸ்ரோ தொடங்கி உள்ளது. அடுத்தாண்டு பணிகள் முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. விண்வெளி திட்டங்களில் தொடர்ந்து இஸ்ரோ வெற்றிக்கொடி நாட்டுவதால் பல நாடுகளும், இஸ்ரோ வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டுகின்றன.
இதற்காக கூடுதல் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, நாடு முழுதும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தியது.
அதன் அடிப்படையில், காற்றின் வேகம் குறைவு, மழைப்பொழிவு குறைவு, புவி வட்ட பாதைக்கு மிக அருகில் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் குலசேகரன்பட்டினம் தேர்வானது.
இதற்காக, குலசேகரன்பட்டினம் அருகில் உள்ள கூடல்நகர், அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில், 2,230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இன்று (மார்ச் 05) பூமி பூஜையுடன் பணிகளை இஸ்ரோ தொடங்கி உள்ளது. அடுத்தாண்டு பணிகள் முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடி ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதே நாளில் ரோகிணி 6H 200 சிறிய வகை ராக்கெட்டை திட்டமிட்டபடி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
வாசகர் கருத்து (17)
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
05 மார்,2025 - 21:00 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
05 மார்,2025 - 20:56 Report Abuse

0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
05 மார்,2025 - 19:14 Report Abuse

0
0
Reply
naranam - ,
05 மார்,2025 - 18:38 Report Abuse

0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
05 மார்,2025 - 17:50 Report Abuse

0
0
Tetra - New jersy,இந்தியா
05 மார்,2025 - 20:00Report Abuse

0
0
Reply
Sampath Kumar - chennai,இந்தியா
05 மார்,2025 - 17:18 Report Abuse

0
0
N Sasikumar Yadhav - ,
05 மார்,2025 - 18:48Report Abuse

0
0
Reply
S Ramkumar - Tiruvarur,இந்தியா
05 மார்,2025 - 16:47 Report Abuse

0
0
Tetra - New jersy,இந்தியா
05 மார்,2025 - 20:02Report Abuse

0
0
Reply
Varuvel Devadas - Roorkee,இந்தியா
05 மார்,2025 - 14:58 Report Abuse

0
0
Reply
இறைவி - ,
05 மார்,2025 - 14:28 Report Abuse

0
0
Reply
kulandai kannan - ,
05 மார்,2025 - 13:38 Report Abuse

0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
-
தேசிய மூத்தோர் தடகளப் போட்டி ஸ்ரீவில்லிபுத்துார் எஸ்.ஐ. சாதனை
-
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
-
மீஞ்சூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது பலன் அளிக்குமா? இடையூறு கம்பம், மின்மாற்றிகளால் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு
-
அ.தி.மு.க., சார்பில் கபடி போட்டி
-
பெண் மர்ம சாவு போலீஸ் விசாரணை
-
மணலுார்பேட்டை நுாலகத்தில் முப்பெரும் விழா
Advertisement
Advertisement