தேசிய மூத்தோர் தடகளப் போட்டி ஸ்ரீவில்லிபுத்துார் எஸ்.ஐ. சாதனை

ஸ்ரீவில்லிபுத்துார்:கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த தேசிய மூத்தோர் தடகள போட்டியில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தி முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்துார் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணமூர்த்தி 55, சிவகாசி தாலுகா ஈஞ்சார் நடுவப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர். தற்போது குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வருகிறார்.
இவர் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார். நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த தேசிய மூத்தோர் தடகள 5ஆயிரம் மீட்டர் ரேஸ் வாக் போட்டியில் பங்கேற்று 30.27 நிமிடங்களில் நடந்து முதலிடம் பெற்றார். உயர் அதிகாரிகள், நண்பர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
Advertisement
Advertisement