அ.தி.மு.க., சார்பில் கபடி போட்டி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி, சிறுவங்கூரில் நடந்தது. இதில் சென்னை, கோயம்புத்துார், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 22 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் அணிகள் கலந்துகொண்டன.
இதில் பெண்கள் பிரிவில் கள்ளக்குறிச்சி சிறுவை எஸ்.வி.ஆர் அணி முதலிடம் பிடித்தது. பொள்ளாச்சி அணி இரண்டாம் இடமும், அந்தியூர் சக்தி பிரதர்ஸ் அணி மூன்றாம் இடமும், திருவண்ணாமலை அணி, நான்காம் இடமும் பிடித்தது.
அதேபோல ஆண்கள் பிரிவில் திருச்சி முதலிடம் பெற்றது. அடுத்தடுத்த இடங்களை, சென்னை அம்பத்துார், கோயம்புத்துார் போத்தனுார், கடலுார் கோண்டூர் அணிகள் வெற்றி பெற்றன. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு கோப்பைகள் மற்றும் பரிசுத் தொகை வழங்கினார்.
முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். போட்டி ஏற்பாடுகளை பாசறை செயலாளர் வினோத் செய்தார்.
விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது