நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் ஆர்ப்பாட்டம்


நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம்:நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஒன்றிய செயலாளர் காளசாமி தலைமையில், தாளவாடியில் அஞ்சல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய, 3,252 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுத்து, ஏழைகளின் வயிற்றில் அடிப்பது நியாயயமா? என்றும் கோஷமிட்டனர்.
இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement