சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது

சென்னை: சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி மதிப்பிலான இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் கொண்டுவரப்பட்ட 3 கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை துறைமுகத்தில் வெளிநாட்டு பொருட்கள் சட்ட விரோதமாக கடத்தி வரப்படுவதாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் துறைமுகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ரூ.18.2 கோடி மதிப்பிலான இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள், காலணிகள், பொம்மைகள், சீன பட்டாசுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேரை கைது செய்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
வெளிநாட்டு பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதற்கு காரணம் என்ன? பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (1)
Petchi Muthu - TIRUNELVELI,இந்தியா
06 மார்,2025 - 14:35 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தமிழக பாடகியை திருமணம் செய்தார் பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா
-
மக்கள் மீது குண்டுகளை வீசிய தென்கொரிய போர் விமானம்; திடீர் பரபரப்பு!
-
காஷ்மீர் பிரச்னை குறித்து பாக்., பத்திரிகையாளர் கேள்வி: ஜெய்சங்கர் நச் பதில்!
-
காமராஜர் பெயரை நீக்கி விட்டு காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா? சீமான் கொந்தளிப்பு
-
மும்மொழி கொள்கைக்கு அனுமதி அளிக்கணும்: சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., முறையீடு
-
இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் ராணா அவசர மனு!
Advertisement
Advertisement