ஆதிதிராவிட நல விடுதி வளாகம் செடி, கொடிகள் வளர்ந்து வீண்

திருவாலங்காடு,திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு, 850க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்குவதற்காக, மணவூர் சாலையில் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 10 மாணவர்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், விடுதி வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், விடுதி நிர்வாகம் தற்போது வரை செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, ஆதிதிராவிட நல விடுதி வளாகத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, விடுதி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
Advertisement
Advertisement