பிரசவத்தில் தாய், குழந்தை பலி

மூணாறு:இடுக்கி மாவட்டம், சாந்தாம்பாறை அருகே டாக்டரான தாயாரும், குழந்தையும் பிரசவத்திற்குப்பின் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சாந்தாம்பாறை அருகே பாறைதோடு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் வீரகிஷோர். இவரது மனைவி டாக்டர் விஜயலெட்சுமி 29, உடும்பன்சோலை குடும்ப சுகாதார மையத்தில் பணியாற்றினார்.
நிறைமாத கர்ப்பிணியான விஜயலெட்சுமியை பிரசவத்திற்காக நெடுங்கண்டம் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மூலம் நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு விஜயலெட்சுமியின் உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டது.
அவரை, தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்தார்.
அதிக ரத்த போக்கு ஏற்பட்டு விஜயலெட்சுமி இறந்ததாக சுகாதாரதுறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
Advertisement
Advertisement