வேகத்தடை இல்லாத நெடுஞ்சாலை அச்சத்தில் அரசு பள்ளி மாணவர்கள்

திருமழிசை, திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் திருமழிசை அமைந்துள்ளது. இங்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி அமைந்துள்ள நெடுஞ்சாலை வழியே, தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து என, தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பள்ளி அருகே வேகத்தடை இல்லாததால், பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இதனால், மாணவ - மாணவியர் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் பகுதிவாசிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, மாணவ - மாணவியரின் நலன் கருதி, அரசு நடுநிலைப் பள்ளி அருகே, நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
-
ஆறுதல் அளித்த தங்கம்; இன்று பவுனுக்கு ரூ.360 குறைவு