இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர்,
திருவள்ளூர் பெரிய குப்பத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

திருவள்ளூர் மின்வாரிய செயற்பொறியாளர் கனகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் பெரியகுப்பத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், இன்று காலை 11:00 - மதியம் 1:30 மணி வரை நடக்கிறது. திருவள்ளூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகித்து, மின் நுகர்வோரிடம் மனுக்களை பெறவுள்ளார்.

எனவே, திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் மற்றும் மக்கள் தங்கள் பகுதியில் மின்துறை சம்பந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement