பெண்ணிடம் தங்க சங்கிலி  பறித்தவர் கைது

தேனி:தேனி மிரண்டாலைன் பழைய ஜி.ஹெச்., ரோடு ராமுத்தாய் 39.

இவர் என்.ஆர்.டி., மெயின் ரோட்டில் உள்ள மருத்துவமனையில் மருந்தாளுநராக பணிபுரிகிறார். மார்ச் 2ல் இரவு 11:00 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டின் பின்புற கதவை தேனி சிவராம் நகரை சேர்ந்த விஜயகார்த்திக்தட்டினார். ராமுத்தாய் கதவை திறந்த பார்த்தார். அப்போது ராமுத்தாய் கழுத்தில் அணிந்திருந்த ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 4 பவுன் தங்கச் செயினை பறித்து சென்று விட்டார்.

பாதிக்கப்பட்ட ராமுத்தாய் புகாரில் தேனி எஸ்.ஐ., மலைச்சாமி வழக்குப் பதிவு செய்து விஜய் கார்த்திக்கை கைது செய்தார்.

Advertisement