வைகையில் படுகை அணை
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் கட்டப்பட்டு வரும் நீளமான படுகை அணையை கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.
படுகை அணை 200 முதல் 250 மீட்டர் வரை நீளம் கொண்டதாக கட்டப்படும், முதன் முறையாக கானூர், பழையனூர் கண்மாய் பாசனத்திற்காக 410 மீட்டர் நீளத்தில் படுகை அணை கட்டப்படுகிறது. படுகை அணையில் வலது புறம் பழையனூர் கண்மாய் பாசனத்திற்காக இரண்டு ஷட்டர்களும், இடது புறம் கானூர் கண்மாய் பாசனத்திற்காக நான்கு ஷட்டர்களும் அமைக்கப்படுகின்றன.
கானூர் கண்மாய் மூலம் மூவாயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்களும், பழையனூர் கண்மாய் மூலம் ஆயிரத்து 200 ஏக்கர் பாசன நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. 40 கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் கட்டப்படும் தடுப்பணை மூலம் பழையனூர், கானூர் கண்மாய்களுக்கு தண்ணீர் முழுமையாக சென்று சேரும். படுகை அணை கட்டுமான பணியை கலெக்டர் ஆஷா அஜித் நேற்று ஆய்வு செய்தார்.
பொதுப்பணித்துறை மாவட்ட செயற்பொறியாளர் ரமேஷ் படுகை அணை பணிகள் குறித்து விளக்கமளித்தார். கோட்ட செயற்பொறியாளர் மோகன்குமார், உதவி பொறியாளர் சுரேஷ், தாசில்தார் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும்
-
ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மக்கள் பாதிப்பு: நகராட்சிகளில் வளர்ச்சி பணிகளில் ஏற்பட்ட சுணக்கம்
-
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை
-
36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது