பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா; ஏ.ஐ.டி.யு.சி., தீர்மானம்

புதுச்சேரி: பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஏ.ஐ.டி.யு.சி., வலியுறுத்தியுள்ளது.
ஏ.ஐ.டி.யு.சி., மாநில நிர்வாகிகள் கூட்டம் முதலியார்பேட்டை அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைத் தலைவர் சந்திரசேகரன்தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார்.
கவுரவத்தலைவர் அபிஷேகம், மாநில பொருளாளர் அந்தோணி, மாநிலத் துணைத் தலைவர்கள் முருகன், மோதிலால், சிவகுருநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் போராட்டத்தின் காரணமாக அரசு நல வாரியமாக அமைக்கப்படும் என அறிவிப்பு செய்து, இதுவரை செயல்படுத்தவில்லை.
எனவே நலவாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரி பாசிக், பாப்ஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும்
-
ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மக்கள் பாதிப்பு: நகராட்சிகளில் வளர்ச்சி பணிகளில் ஏற்பட்ட சுணக்கம்
-
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை
-
36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது