மக்கள் மீது குண்டுகளை வீசிய தென்கொரிய போர் விமானம்; திடீர் பரபரப்பு!

சியோல்: தென் கொரியாவில் குடியிருப்புகள் மீது, போர் விமானம் 8 குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தவறுதலாக நடந்ததாக தென் கொரிய ராணுவம் மன்னிப்பு கோரியது.
தென் கொரியாவில் குடியிருப்புகள் மீது, போர் விமானம் 8 குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. குண்டுகள் தாக்கி, பொதுமக்கள் 15 பேர் காயம் அடைந்தனர். போச்சியோனில் வீடுகள் மற்றும் ஒரு தேவாலயம் சேதமடைந்தன. இந்த தாக்குதல் நடந்த பகுதி, தலைநகர் சியோலில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இது குறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த விபத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போர் பயிற்சியின் போது தவறுதலாக குண்டுகள் வீசப்பட்டதாக தென் கொரிய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. குண்டு வீச்சு சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியதோடு அப்பகுதியில் போர் பயிற்சி முழுவதும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.




மேலும்
-
மகளை பலாத்காரம் செய்ய தாய் உடந்தை: ஆத்தூர் அருகே 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
-
நியூட்டன் கண்டுபிடிப்புக்கு முன்னரே வேதங்களில் புவியீர்ப்பு விசை பற்றிய குறிப்புகள் : ராஜஸ்தான் கவர்னர் பேச்சு
-
நிலாவுக்கே சென்றாலும் ஜாதியை கொண்டு செல்வார்கள்: ஐகோர்ட் கருத்து
-
ஜார்க்கண்டில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார் பாபுலால் மராண்டி
-
ரவுடி கொலையில் ஒருவருக்கு தூக்கு தண்டனை : 4 பேருக்கு ஆயுள் : திருநெல்வேலி கோர்ட் தீர்ப்பு
-
ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வீசிய ஊழியர்: வீடியோ வைரல்