ரவுடி படப்பை குணா கைது

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடி படப்பை குணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் தண்ணீர் பாய்ச்சும் விவகாரத்தில் குணா தன்னை மிரட்டுவதாக மோகன் என்பவர் போலீசில் புகார் அளித்து இருந்தார். இதன் அடிப்படையில், குணாவை கைது செய்த சுங்குவார்சத்திரம் போலீசார், அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.

Advertisement