ஹிந்தி திணிப்பை கண்டித்துமுற்றுகை போராட்டம்


ஹிந்தி திணிப்பை கண்டித்துமுற்றுகை போராட்டம்

தர்மபுரி:தமிழகத்தில் ஹிந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்த்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், தர்மபுரி தலைமை தபால் அலுவலகம் முன், நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் நவீன்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இ.கம்யூ., தர்மபுரி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமரன் ஆகியோர் ஹிந்தி திணிப்பை எதிர்த்து பேசினர்.

Advertisement