தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்துள்ளது: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிவிப்பு

சென்னை : 'தமிழகத்தில், ஆதாயக் கொலைகள் மற்றும் கொலைகள், திருட்டு மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த, 2024ல் பதிவான வழக்குகள், அவற்றின் தற்போதைய விசாரணை நிலை, அதன் வகைப்பாடுகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. அப்போது, நகை, பணம் உள்ளிட்ட சொத்துக்களை கொள்ளையடிக்கும் விதமாக நடந்த ஆதாயக் கொலைகள் தொடர்பாக, 2023ல், 83 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்தாண்டில், 75 வழக்குகள் பதிவாகி, 10 சதவீதம் குறைந்துள்ளது.
கூட்டுக் கொள்ளை தொடர்பாக, 2023ல், 133 வழக்குகள் பதிவான நிலையில், கடந்தாண்டில், 110 ஆக குறைந்துள்ளது. கொள்ளை தொடர்பாக, 2023ம் ஆண்டுடன் ஒப்பீடுகையில், 373 வழக்குகள் குறைந்துள்ளன.
திருட்டு தொடர்பாக, 2023ல், 17,788 வழக்குகள் பதிவாகி இருந்தன. அதுவே கடந்தாண்டில், 15,892 வழக்குகளாக பதிவாகி, 10.65 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஆதாயக் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை, வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்கள், அமாவாசை இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகள் வாயிலாக, குற்ற வழக்குகளை குறைப்பது சாத்தியமாகி உள்ளது.
'சிசிடிவி' காட்சிகள் கண்காணிப்பு, புதிய இடங்களில், 'சிசிடிவி' பொருத்துதல், 'ஸ்மார்ட்' காவலர் செயலி மற்றும் எப்.ஆர்.எஸ்., செயலி வாயிலாக படம் பிடித்து, பழைய குற்றவாளிகளை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளும், குற்ற வழக்குகள் குறைய காரணமாக அமைந்துள்ளன. கொலை, கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல் தொடர்பாக, 2023ல், 49,266 வழக்குகள் பதிவாகின. அதை ஒப்பிடும் போது, கடந்தாண்டு, 17,789 வழக்குகளாக குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.
இவற்றில், கொலைகளை பொறுத்தவரையில், 110 வழக்குகள் குறைந்துள்ளன. கலவரங்கள் ஏற்பட்டது தொடர்பாக, 2023ல், 1,305 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்தாண்டில், 76 வழக்குகள் குறைந்துள்ளன. இரண்டு ஆண்டுகளில், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையில், 423 பேருக்கு சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அவர்களில், 235 பேருக்கு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
ஜாமினில் வெளிவந்து குற்றங்களில் ஈடுபட்ட, 86 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவு ரவுடிகளுக்கு ஜாமின் கையெழுத் திட்டவர்கள், 21 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. குற்ற வழக்குகளில் சிக்கிய, 8,266 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (43)
Rajan A - ,இந்தியா
07 மார்,2025 - 16:51 Report Abuse

0
0
Reply
பாலா - singapore,இந்தியா
07 மார்,2025 - 14:46 Report Abuse

0
0
Reply
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
07 மார்,2025 - 12:11 Report Abuse

0
0
Reply
sugumar s - CHENNAI,இந்தியா
07 மார்,2025 - 12:03 Report Abuse

0
0
Reply
பாரத புதல்வன் - ,
07 மார்,2025 - 12:01 Report Abuse

0
0
Reply
Sankare Eswar - tuas,இந்தியா
07 மார்,2025 - 11:36 Report Abuse

0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
07 மார்,2025 - 11:30 Report Abuse

0
0
Reply
Anand - chennai,இந்தியா
07 மார்,2025 - 11:15 Report Abuse

0
0
Reply
Ganapathy Subramanian - Muscat,இந்தியா
07 மார்,2025 - 11:07 Report Abuse

0
0
Reply
Rajah - Colombo,இந்தியா
07 மார்,2025 - 10:43 Report Abuse

0
0
Reply
மேலும் 33 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement