மகளிர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம்

கடலுார் : சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி, கடலுார் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நெடுந்துார ஓட்ட பந்தயம் நடத்தப்பட்டது.
தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக மாநகராட்சி கமிஷனர பங்கேற்று, ஓட்டப் பந்தயத்தை துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட பெண் போலீசார், கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி, ஜெயின்ட் ஜோசப் கல்லூரி, இமாகுலேட் மகளிர் கல்லூரி, தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரி மாணவிகள் உள்ளிட்ட 300 பேர் பங்கேற்றனர்.
ஓட்டப்பந்தயத்தில் மாணவி யாழினி முதலிடம் பிடித்தார். இரண்டாம் இடத்தை மாணவிகீர்த்திகா, மூன்றாம் இடம் மாணவி தேவி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி., நல்லதுரை, டி.எஸ்.பி.,க்கள் பார்த்தீபன், அப்பண்டைராஜ், இன்ஸ்பெக்டர்கள் கவிதா, ரேவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பா.ஜ., ஆதரவாளர்களை எப்போது களையெடுப்பீர்கள்; ராகுலுக்கு திக்விஜய் சிங் கேள்வி
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.