கலால் உதவி கமிஷனர் காரில் சிக்கியது ரூ.3.75 லட்சம்; மடக்கியது லஞ்ச ஒழிப்பு போலீஸ் படை!

விருதுநகர்: விருதுநகரில் ரூ.3.75 லட்சத்துடன் காரில் சென்ற மாவட்ட கலால் துறை உதவி கமிஷனர் கணேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சியைச் சேர்ந்த கணேசன் 58, விருதுநகர் மாவட்ட கலால் துறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு விருதுநகரில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சத்திர ரெட்டியப்பட்டி போலீஸ் சோதனைச் சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காரை சோதனையிட்டனர். அதில் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்தனர். தனியார் மதுக்கூடங்கள் மற்றும் மெத்தனால் பயன்படுத்தும் நிறுவனங்களில் இருந்து பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுவது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.






மேலும்
-
காஷ்மீரில் முத்தையா முரளிதரனுக்கு இலவச நிலம் ஒதுக்கப்பட்டதா: சட்டசபையில் கேள்வி
-
பா.ஜ., ஆதரவாளர்களை எப்போது களையெடுப்பீர்கள்; ராகுலுக்கு திக்விஜய் சிங் கேள்வி
-
அரைசதம் அடித்தார் கேப்டன் ரோகித்; கில் நிதான ஆட்டம்
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்