100 பவுன் கொள்ளை நடந்தவீட்டில் டி.ஐ.ஜி., விசாரணை
100 பவுன் கொள்ளை நடந்தவீட்டில் டி.ஐ.ஜி., விசாரணை
அதியமான்கோட்டை:நல்லம்பள்ளி அருகே, 100 பவுன் கொள்ளை நடந்த ஆசிரியை வீட்டில், சேலம் டி.ஐ.ஜி., உமா ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை அருகே, நேற்று முன்தினம் ஆசிரியை ஷேர்லின்பெல்மா, 44, என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 100 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து, அதியமான்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க, தர்மபுரி, டி.எஸ்.பி., சிவராமன் தலைமையில், 3 தனிப்படை கள் அமைத்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். நேற்று மாலை சேலம் டி.ஐ.ஜி., உமா, கொள்ளை நடந்த ஆசிரியை வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியம், தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா உடனிருந்தனர்.
மேலும்
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? கோப்பையை வென்ற பிறகு ரோஹித் வெளியிட்ட தகவல்
-
40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு
-
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நாளை வெள்ளி ரத உத்சவம்
-
ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்
-
கோழி இறைச்சி கழிவால் சீரழியும் சாலமங்கலம் ஏரி