அமைச்சருக்காக வெடித்த பட்டாசு: கோவில் கோபுரத்தில் பிடித்தது
அமைச்சருக்காக வெடித்த பட்டாசு: கோவில் கோபுரத்தில் பிடித்தது தீ
ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூரில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, அஞ்சனாட்சி அம்மன் உடனுறை மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாசி மக பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. ஏழாம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் அமைச்சர் காந்தி பங்கேற்றார். அவரை வரவேற்று தி.மு.க.,வினர் வெடித்த பட்டாசு தீப்பொறி பறந்து, அப்பகுதியில் கும்பாபிஷேக பணிக்கு தயாராகி கொண்டிருந்த செல்வவிநாயகர் கோவில் கோபுரம் மீது விழுந்தது. கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த தென்னங்கீற்று தீப்பிடித்து எரிந்தது. கோபுரத்தில் கும்பாபிஷேக பணியில் ஈடுபட்டிருந்த நான்கு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து கீழே குதித்து தப்பினர். தேரோட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருமால்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
ஆரோவில்லில் 'ஷோ ஜம்பிங்' குதிரையேற்ற போட்டி
-
கை விரல் ரேகை பதிவில் தொடர் சிக்கல் ரேஷன் பொருள் வினியோகம் தாமதம்
-
'அப்டேட்' ஆகாத 'கியூட்' தேர்வு வெப்சைட்; மாணவர்கள் குழப்பம்
-
விஜயகரிசல் குளத்தில் கூடுதலாக 2 குழிகளில் அகழாய்வு
-
குல்பூஷண் ஜாதவ் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் கொலை
-
தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி செந்துாரில் சுவாமி வீதி உலா