எச்சரித்த உளவுத்துறை ரவுடிகள் மூவர் கைது
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் முன்விரோதம் காரணமாக, சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை வாயிலாக, புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி போலீசார், சந்தேகம்படும் படி சுற்றித் திரிந்த இருவரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், புளியந்தோப்பு, காந்தி நகரைச் சேர்ந்த அருப்பு சங்கர், 38, மண்டை பிரசாந்த், 25, என தெரிந்தது.
இவர்கள், கொலை செய்யப்பட்ட கருப்பா ரகுபதி என்பவரது கூட்டாளிகள் என்பதும், அந்த கொலைக்கு பழிவாங்க திட்டம் தீட்டியதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர்.
அதேபோல், புளியந்தோப்பு, அம்பேத்கர் கல்லுாரி சாலை அருகே சூர்யா, 25, என்பவரை கத்தியால் தாக்கிய வழக்கில், கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ரீகன், 25, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? கோப்பையை வென்ற பிறகு ரோஹித் வெளியிட்ட தகவல்
-
40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு
-
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நாளை வெள்ளி ரத உத்சவம்
-
ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்
-
கோழி இறைச்சி கழிவால் சீரழியும் சாலமங்கலம் ஏரி