மின்சார ரயில் ரத்து தாம்பரத்தில் நெரிசல்

சென்னை,
கடற்கரை -- எழும்பூர் இடையே, நான்காவது புதிய ரயில் பாதையின் இறுதிக்கட்ட பணி நேற்று நடந்தது. இதனால், கடற்கரை -- தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில் அதிகாலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை என, 11 மணி நேரம் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும், பயணியர் வசதிக்காக, தாம்பரம் -- கோடம்பாக்கம் இடையே, 30 நிமிடம் இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மின்சார ரயில் ரத்தால், தாம்பரம் ரயில் நிலையத்தில், சிறப்பு ரயிலை பிடிக்க பயணியர் கூட்டம் அலைமோதியது.
இதனால், அரசு பேருந்தை நோக்கி பயணியர் சென்றதால், தாம்பரம் பேருந்து நிலையத்திலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மாலை 4:10 மணிக்குப்பின், வழக்கமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டதால், கூட்ட நெரிசல் படிப்படியாக குறைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய வம்சாவளி மாணவி மாயம்; டொமினிகன் குடியரசில் தேடுதல் தீவிரம்
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? கோப்பையை வென்ற பிறகு ரோஹித் வெளியிட்ட தகவல்
-
40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு
-
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நாளை வெள்ளி ரத உத்சவம்
-
ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்
Advertisement
Advertisement