துாய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழாவில், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கமிஷனர் வசந்தி, நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா, ஒன்றிய சேர்மன் வாசன், மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கேசவன், சிறுபான்மைபிரிவு தாகீர், முன்னாள் ஊராட்சி தலைவர் நன்னாடு முத்துசாமி, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement