மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், பென்னலூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆகியவை, தெருக்களிலே தேங்கி வந்தது.
இதனால் அப்பகுதியில் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருந்து வந்தது.
எனவே, அப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2022 --- 23ம் நிதி ஆண்டில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 17.60 லட்சம் ரூபாய் செலவில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது.
தற்போது, கால்வாய் முறையான பராமரிப்பு இல்லாமலும், செடி, கொடிகள் வளர்ந்துஉள்ளன.
எனவே, மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கல்வி நிதி விவகாரத்தில் கனிமொழி புகார்; பேசியதை வாபஸ் பெற்றார் மத்திய அமைச்சர்!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்
Advertisement
Advertisement