அரிய வகை மரபியல் நோயால் லக்சம்பர்க் இளவரசர் மரணம்

2

பாரிஸ்: லக்சம்பர்க் நாட்டின் இளவரசரான பிரெட்ரிக், அரிய வகை மரபியல் நோய் ஒன்றின் காரணமாக உயிரிழந்து விட்டதாக அவரது தந்தை இளவரசர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் அமைந்துள்ள குட்டி நாடு லக்சம்பர்க். உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. இந்த நாட்டின் இளவரசர் பிரெட்ரிக், அரிய வகை நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இது பற்றி அவரது தந்தையும், இளவரசருமான ராபர்ட் தனது சமூக ஊடகப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். மார்ச் 1ம் தேதி அவர் பாரிசில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரடெரிக், 22, கடந்த 2022ல் அரிய வகை நோய்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் வகையில் போல்க் அறக்கட்டளையை உருவாக்கினார்.

அவருக்கு ஏற்பட்ட மரபியல் நோய் காரணமாக மூளை, நரம்புகள், தசைகள் மற்றும் கல்லீரல், கண்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதற்கு சிகிச்சை முறை இதுவரை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement