100வது ஆண்டாக தென்னேரி தெப்பல் உத்சவம்

காஞ்சிபுரம், வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில், நடப்பாண்டு 100வது தெப்போற்சவத்தை முன்னிட்டு, மார்ச்- 8ம் தேதி, இரவு 9:30 மணிக்கு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, புறப்பட்டு சென்றார்.

நேற்று முன்தினம் அதிகாலை, தென்னேரி வந்தடைந்த பின், நாவிட்டான்குளம், திருவாங்கரணை, குண்ணவாக்கம், அகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று, அதே இரவு 9:00 மணி அளவில், தென்னேரி உற்சவ மண்டபத்தை வந்தடைந்தார்.

அங்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.

இரவு 10:30 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தென்னேரி தெப்பலில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்தார்.

Advertisement