விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோத்தகிரி : கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ரேஞ்சர் செல்வராஜ், தோட்டக்கலை துறை அலுவலர் கவின் பிரசாத், பள்ளி தலைமை ஆசிரியை மோட்சா மேரி ஆகியோர், கானுயிர் பாதுகாப்பு குறித்து, வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகித்து பேசினர்.

சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமரவேலு, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 'காடுகள் மேம்பட யானைகளின் பங்கு முக்கியமானது,' என்பதை விளக்கி பேசினார்.

Advertisement