தார்ச்சாலை வசதி கேட்கும் எல்லீஸ்பேட்டை மக்கள்
ஈரோடு: கவுந்தப்பாடி அருகேயுள்ள எல்லீஸ்பேட்டை, அண்ணா காலனியை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில், 50 குடும்பத்தினர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம்.
கடந்த, 1989ல் வருவாய் துறை மூலம் நிலவரி பட்டா வழங்கப்பட்டது. ஆனால், எங்கள் பகுதிக்கு தார்ச்சாலை அமைக்கவில்லை. இதற்கான நிலம் வழங்கியும் சாலை அமைக்க முன்வரவில்லை. குழந்தைகள், முதியோர் நடந்தும், வாகனங்களில் செல்லவும் சிரமப்படுகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கே சிரமமாக உள்ளது. எனவே தார்ச்சாலை அமைத்துதர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
-
கெஜ்ரிவாலுக்கு சிக்கல்: வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு டில்லி கோர்ட் உத்தரவு
-
இந்தியா -மொரீசியஸ் உறவுகள் வலுவானவை: பிரதமர் மோடி பெருமிதம்
-
தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு
-
ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.100, ரூ.200 நோட்டு வெளியிட முடிவு
-
ரூ.7 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ., - உதவியாளர் கைது
Advertisement
Advertisement