எனக்கு இந்த நாற்காலி வேணும்; எடுத்துக் கொண்டு புறப்பட்டார் ட்ரூடோ; படம் இணையத்தில் வைரல்!

16


ஒட்டாவா: கனடா பார்லிமென்டில் இருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஜனவரியில், தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்தாண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மக்களின் செல்வாக்கை இழந்ததால், கட்சியின் ஒரு பிரிவினர் நெருக்கடியைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.

கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, பிரதமராக அவர் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மார்க் கார்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களில் அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.



இந்நிலையில், இன்று புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார். இருவரும் சில மணி நேரம் ஆலோனை நடத்தினார். இதற்கிடையே தனது பதவிக்காலம் முடிவடைவதால், ஜஸ்டின் ட்ரூடோ தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.


அவர் பார்லிமென்டில் இருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

Advertisement