ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை உயர்வு
ஈரோடு: ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஜவுளி வாரச்சந்தை விற்பனை நடந்தது. பல்வேறு மாவட்ட மொத்த விற்பனையாளர், நேரடி தயாரிப்பாளர், வியாபாரிகள், கடைக்காரர்கள் விற்பனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
கடந்த ஒரு மாதமாக வாரச்சந்தையில் பல்வேறு காரணத்தால் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. முகூர்த்த சீசனாக உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில கடைக்காரர்கள், வியாபாரிகள் மற்றும் மக்கள் நேற்று அதிகம் வந்தனர். மொத்த விற்பனை மிகவும் குறைவாக நடந்தாலும், சில்லறை விற்பனை, 40 சதவீதம் வரை நடந்தது. இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்
-
ஹரியானாவில் தொடரும் பா.ஜ.,வின் அலை; 10 மேயருக்கான தேர்தலில் 9ல் வெற்றி
-
ஆட்டோ டிரைவரான டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர்: பெங்களூருக்காரருக்கு ஏற்பட்ட சோகம்
-
உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்: உதயநிதி பேச்சு
-
முன்னறிவிப்பின்றி கட்டண வசூல்: டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்
-
பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement