கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசிமக தேரோட்டம்
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசிமக தேரோட்டம்
கரூர்:தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தெப்ப திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.
கரூர் அருகே, தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில் கடந்த, 4 ல் மாசிமக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜை, அபி ேஷகம் ஆகியவை நடந்து வருகிறது. கடந்த, 10ல் கோவில் மண்டபத்தில், திருக்கல்யாண உற்வசம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை, வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமியை வழிபட்டனர்.
நாளை மாலை, 6:00 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. அதற்காக கோவில் எதிரில் உள்ள குளத்தில், பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. வரும், 17ல் வெள்ளி கருடசேவை, 19ல் ஆளும் பல்லாக்கு, 20ல் ஊஞ்சல் உற்சவம், 21ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
மேலும்
-
தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
-
முதல்வர் பற்றி அவதூறு பேச்சு; சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து
-
மேஜிக் செய்வதற்கும் உண்மையான ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் என்ன?
-
ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!
-
40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
-
ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்; அறிவித்தார் அப்பாவு!