வேளாண் விரிவாக்க மையம்சுற்றுலாத்துறை அமைச்சர் திறப்பு



வேளாண் விரிவாக்க மையம்சுற்றுலாத்துறை அமைச்சர் திறப்பு


ஆத்துார்:ஆத்துார் அருகே தென்னங்குடிபாளையம் ஊராட்சி, அய்யனார்பாளையத்தில், 2 கோடி ரூபாயில், வேளாண் துறை சார்பில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் கட்டப்பட்டது.
அந்த கட்டடத்தை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, பயிற்சிக்கு வந்திருந்த, கல்லுாரி மாணவிகளிடம், வேளாண் முகாம் குறித்து கேட்டறிந்தார். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், துணை செயலர் சுரேஷ்குமார், ஆத்துார் ஒன்றிய செயலர் செழியன், வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement