வெயில் தாக்கத்தை குறைத்த திடீர் மழை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வந்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தேர்வு காலம் என்பதால் வெயிலோடு சென்று வரும் நிலைக்கு ஆளாகினர்.
மேலும் தினமும் பணிக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு சிகிச்சை, பரிசோதனைக்கு சென்று வந்தவர்களும் வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கருமேக கூட்டங்களுடன் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்துார் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
இதனால் நேற்று இரவு வரை குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
மேலும்
-
பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய மத போதகர் கைது
-
எங்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம் தேவை; கல்லுாரி மாணவர்கள் 'பளிச்'
-
மத்திய அமைச்சர் மீது அவதூறு: மின்னல் வேகத்தில் செயல்பட்டது போலீஸ்!
-
திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு: நடிகை ரூபிணியிடம் மோசடி செய்த பி.ஆர்.ஓ.,
-
பொன் மாணிக்கவேல் மீது வழக்கு; சி.பி.ஐ., மீது ஐகோர்ட் அதிருப்தி
-
புற்றுநோய்க்கு காரணமாகும் இறைச்சி?