ஸ்ரீமாரியம்மன் - ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

பல்லடம்; பல்லடம் அடுத்த பருவாய் கிராமத்தில், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா பிப்., 25ல், துவங்கியது.
விழாவில், நேற்று முன்தினம், விநாயகருக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மாகாளியம்மன் கும்பம் தரித்தல், அம்மை அழைத்தல், ஸ்ரீமாரியம்மன் - ஸ்ரீமாகாளியம்மன் திருக்கல்யாணம் ஆகியவை நடந்தன.
நேற்று ஆதி விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து, சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், மாரியம்மன், மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை, மஞ்சள் நீராடல் நிகழ்வுடன்விழா நிறைவடைகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும்: முதல்வர் ஸ்டாலின்
-
மதம் மாற வற்புறுத்திய அப்ரிடி; பாக்., முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பகீர்
-
தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
-
அவிநாசியில் விவசாய தம்பதி கொலை; அண்ணாமலை கண்டனம்
-
யூடியூப் பார்த்து தங்கத்தை மறைக்கக் கற்றேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்
-
மத்திய பிரதேசத்தில் சோகம்! நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மோதி 7 பேர் பரிதாப பலி
Advertisement
Advertisement