வீட்டில் நிறுத்திய பைக் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்த குபேந்திரன் மகன் செல்வபெருமாள்,23; கூலி தொழிலாளி. இவரது வீட்டின் முன்பு, பைக்கை நிறுத்தி வைத்துவிட்டு, வெளியே சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது, பைக் திருட்டுபோனது.

இது குறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement