சாலை மையத்தடுப்பில் 25 மரக்கன்று நடவு

அவிநாசி; குளம் காக்கும் அமைப்பு மற்றும் களம் அமைப்பு சார்பில், அவிநாசியில் மரம் நடும் விழா நேற்று நடைபெற்றது.
குளம் காக்கும் அமைப்பு தலைவர் துரை துவக்கி வைத்தார். அவிநாசி - சேவூர் ரோடு, சிந்தாமணி தியேட்டர் அருகே, ரோட்டின் மையத்தடுப்பில் வரிசையாக மரக்கன்றுகள் நடப்பட்டன. தன்னார்வலர்கள், பொதுமக்கள், 'மரங்களை வளர்க்கும் மனங்களை வளர்ப்போம்; பசுமை பாரதத்தை உருவாக்குவோம்' என்கிற பதாகைகள் ஏந்தியவாறு, ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம், 25 மகாகனி மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளின் பாதுகாப்புக்கு, இரும்பு வலை கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை களம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் அதன் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement